Subscribe Us

header ads

நாடாளுமன்ற உறுப்பினர் ஹலீம் அவர்கள் முஸ்லிம் கலாச்சார அமைச்சராக தகுதியானவரே...


facebook இல் Account வைத்திருக்கும் எங்கள் சமூகத்தில் இருக்கும் சிலர் தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கும் பொறாமை என்ற மனநோய்க்கு வடிகாலாக தனது சொந்த கருத்தை சமூகத்தின் கருத்தாக POST செய்வது இப்போது வழக்கமாக காணக்கூடியதாக இருக்கிறது. ஜனாப் ஹலீம் அவர்கள் அரசியலில் நுழைந்தது 1987 என்று நினைக்கிறேன். அப்போதிலிருந்தே அவர் மத்திய மாகான சுகாதார அமைச்சராகவும் முஸ்லிம் கலாச்சார அலுவல்கள் அமைச்சராகவும் பின்னர் ஜனாப் ஹமீது அவர்களின் மறைவுக்குப்பின் ஐ.தே.க வால் சிங்கள முஸ்லிம் மக்கள் வாழும் ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதிக்கு நியமித்தது. இலங்கையில் மிகவும் பழமை வாய்ந்த கட்சி தனது கட்சியின் அமைப்பாளராக தகுதி இல்லாதவரை நியமிக்கும் என்று இதை எழுதியவர் நினைத்தால் இவரின் உள்நோக்கம் மக்களுக்கு புரியும். இலங்கை தேர்தல் முறைப்படி இவர் சொல்வது போல் ஜனாப் ஹலீம் அவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லையெனில் மக்களால் மூன்று முறை தெரிவு செய்யப்பட்டது எப்படி? அதுவும் முஸ்லிம் கட்சி தலைவரையும் பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வந்து சாதனை படைத்து இருக்கின்றார் . ஒவ்வொரு முறையும் கண்டி மாவட்டத்தில் இவர் மட்டும் அல்ல பல முஸ்லிம் அபேட்சகர்கள் போட்டி இடுகிறார்கள். மக்கள் வேண்டுமானால் இவரை தெரிவு செய்யாமல் வேறு யாரையேனும் தெரிவு செய்ய சந்தர்பம் உண்டு, என் அது நடக்கவில்லை. எங்கள் சமூகத்தில் சில புதிய பணம் படைத்த கனவான்கள் தனது பணப்பலத்தை கொண்டு சதி செய்யவும் அரசியலில் நுழைய சந்தர்பத்தை ஏற்படுத்தி கொள்ளவும் இவைகளுக்கு துணை போகும் இதை எழுதிய சகோதரர் போன்றோரும் செய்யும் சூழ்ச்சிகளும் அக்குரணை மக்களும் கண்டி மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களும் அறியாததல்ல. இம்முறை இவரின் அயராத முயற்சியால் தந்தி தொகுதியை 21000 அதிகப்படியான வாக்குகளால் வெற்றியீட்டியது ஒரு சாதனை இல்லையா? நண்பரே அ\ல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள் சக முஸ்லிம் சகோதரனுக்கு குழி பறிப்பதை நிருத்திக்கொள்ளுங்கள்.

Post a Comment

0 Comments