சிராணி பண்டாரநாயக்க சற்று நேரத்திற்கு முன்னர் உயர் நீதிமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
தற்போதய பிரதம நீதியரசர் மொஹான் பிரீஸ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உயர் நீதிமன்றத்திற்கு முன்பாக ஆர்பாட்டம் இடம்பெற்ற நிலையில் சிராணி பண்டாரநாயக்க சற்று முன்னர் உயர் நீதிமன்றத்திற்கு விஜயம் செய்துளளார்.
இதேவேளை சிராணி பண்டாரநாயக்க மீது குற்றவியல் பிரேரணை கொண்டுவரப்பட்டு அவர் பதவி நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனவும், அதன் அடிப்படையில் தொடர்ந்தும் அவரே பிரதம நீதியரசர் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதய பிரதம நீதியரசர் மொஹான் பிரீஸ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உயர் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்பாட்டத்தின்போது சட்டத்தரணி ஜே.சி.வெலியமுன இந்த விடயத்தினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments