புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறினோவின் பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படை வீரர்களை நியமிக்குமாறு கோரி இதுவரை எந்த எழுத்து மூல வழிகாட்டுதலும் தமக்கு வழங்கப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
முன்னைய இணைப்பு:
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்புக்காக 45 விசேட அதிரடிப்படை வீரர்களை நியமிக்குமாறு தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய உதவி பொலிஸ் உத்தியோகத்தர் காமினி நவரட்ணவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பொதுவேட்பாளரின் மேடை எரிக்கப்பட்டமை, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை, தொடர்பில் அவரது பாதுகாப்புக் கேள்விக்குறியாகியுள்ளது எனவும் அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச தேர்தல் ஆணையாளரிடம் முன்னர் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த கோரிக்கைக்கு அமைய 45 விசேட அதிரடிப்படை வீரர்களை நியமிக்குமாறு உத்தரவு பிறப்பித்ததாக தேர்தல் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.
0 Comments