Subscribe Us

header ads

பதவி வந்ததும் கொள்கை மாறியது; ஜனாதிபதி வேட்பாளராக ரணில் போட்டியிட்டால் அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவு- சஜித்

 
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால், அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்படும் என அந்த கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டால், அவருக்கு எனது ஆதரவு வழங்கப்படும் என்பதை நான் இன்று நேற்றல்ல தொடர்ந்தும் கூறி வருகிறேன் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், பதவிகள் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். கடந்த காலங்களில் வாக்களிப்பு மூலம் பதவிகள் கிடைத்தன.

சில காலம் பதவி இல்லாமல் போனது. பதவியின்றி செயற்பட்ட காலத்தில் பாரிய அனுபவங்களை பெற முடிந்தது எனவும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments