இந்தியா: (கர்நாடகா)
திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணி
3வது நாளாக தொடர்ந்தாலும், மீட்பு பணியில் மிகுந்த காலதாமதம்
ஏற்பட்டுள்ளது.
பாகல் கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா சூலிகேரி கிராமத்தில் கடந்த
ஞாயிற்றுக்கிழமை (நேற்றுமுன்தினம்) மதியம் சுமார் 300 அடி ஆழ ஆழ்துளை
கிணற்றில் திம்மண்ணா என்ற ஆறு வயது சிறுவன் எதிர்பாராமல் தவறி
விழுந்துள்ளான்.
ஹனுமந்தஹட்டி என்பவர் இந்த ஆழ்துளை கிணற்றை தோண்டிவிட்டு தண்ணீர் வரவில்லை என்று அதை அப்படியே திறந்துவிட்டிருந்தார்.
சம்பவத்தன்று தனது உறவுக்கார பையனுடன் அப்பகுதிக்கு சென்ற திம்மண்ணா கிணற்றில் எதிர்பாராமல் விழுந்துவிட்டான்.
இதைப்பார்த்த, உடன் வந்த உறவுக்கார சிறுவன் கொடுத்த தகவலின்பேரில்,
ஊர்க்காரர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம்,
காவல்துறை, தீயணைப்பு துறை இணைந்து மீட்பு பணியை துவக்கின.
குழாய் மூலம் ஆக்சிஜன் உள்ளே அனுப்பப்படுகிறது. இரவு பகல் பாராமல்
மீட்பு பணி தொடர்ந்து கொண்டுள்ளது. கிணற்றுக்குள் சிசிடிவி காமிராவை
நுழைத்து, சிறுவன் அசைவுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மண்டியாவை சேர்ந்த மஞ்சேகவுடா என்பவர் ரோபோ உதவியுடன் சிறுவனை மீட்க
நடத்திய முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. எனவே, போர்வெல் அருகே மற்றொரு
ஆழமான கிணறு தோண்டி அதன் வாயிலாக சிறுவனை மீட்கும் முயற்சியில் மட்டும்
மீட்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்றுமுன்தினம் மாலையில் சுமார் 60 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டிருந்த
சிறுவன், கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கி தற்போது 160வது அடி ஆழத்தில்
சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஆக்ஜிஜன் குழாய் 185 அடி ஆழம்
வரை நீட்டிக்கப்பட்டு சுவாசத்துக்கு தொந்தரவு ஏற்படாமல்
பார்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.
சிறுவனுக்கும், மீட்பு குழுவினருக்கும் நடுவே அதாவது சுமார் 150வது
அடியில் கல் மற்றும் மண் சிக்கிக்கொண்டுள்ளது. இந்த கல் அல்லது மண் கீழே
விழுந்தால் சிறுவனின் தலையில் ரத்த காயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
அதுமட்டுமின்றி அதிர்ச்சியில் சிறுவன் மேலும், கீழே ஆழமான பகுதிக்கு
செல்லவும் வாய்ப்புள்ளது. எனவே கல் மற்றும் மண்ணை லாவகமாக எடுக்கும்
முயற்சியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, மதுரையை சேர்ந்த ரோபோ விஞ்ஞானி மணிகண்டன் இன்று மதியம்
பாகல்கோட்டை வந்தடைகிறார். அவர் ரோபோ மூலம் மீட்பு பணியில் ஈடுபட உள்ளார்.
மேலும், போர்வெல் அருகே சுரங்க பாதை தோண்டப்பட்டு வருகிறது. இதற்காக இதுவரை
80 அடி ஆழம் தோண்டப்பட்டுள்ளது. மேலும் பல அடி தோண்ட வேண்டியுள்ளதால்
மீட்பு பணி மேலும் மூன்று நாட்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரையை சேர்ந்த ரோபோ விஞ்ஞானி மணிகண்டன் எந்த முறையில் தனது ரோபோ
மூலம் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவர்களை காப்பாற்றுகிறார் என்பது
பற்றிய வீடியோ உங்கள் பார்வைக்கும்.
0 Comments