Subscribe Us

header ads

ஊவாவை வென்று காட்டினால், கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் – மைத்திரி குணரத்ன

ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டுமாக இருந்தால், ஊவா மாகாண சபைத் தேர்தலில் கட்சியை வெற்றி பெறச் செய்து காட்டட்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபையொன்றை வெற்றி பெறச் செய்ய முடியாத ஒருவரினால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியாது. ஊவா தேர்தலில் கடுமையாக உழைத்து கட்சியை வெற்றி பெறச் செய்துவிட்டு, ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்சியின் அபேட்சகராகுங்கள். கட்சியின் நம்பிக்கையை வென்றெடுக்கும் வரையில் அவருக்கு அபேட்சகராக தகுதி பெற முடியாது.

40 வீத வாக்குகளை கட்சிக்கு பெற்றுக் கொடுக்க அவர் தவறினால், இதனை செய்ய முடியுமான ஒருவருக்கு கொடுத்து விட்டு அவர் ஒதுங்குவதுதான் சிறந்தது எனவும் முன்னாள் தென்மாகாண உறுப்பினர் மேலும் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments