க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2013 ஆம் ஆண்டு பெறுபேறுகளின் படி பரீட்சைக்குத் தோற்றிய மொத்த மாணவர்களுள், ஒன்பது பாடத்திலும் சித்தியடையாதவர்கள் 9444 பேர் இருப்பதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்ற வருடம் இப்பரீட்சைக்கு 264,772 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இறுதியாக வெளிவந்த பெறுபேறுகளின் படி எந்தவொரு பாடத்திலும் சித்தியடையத் தவறியவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டுள்ளது. 2010ஆம் ஆண்டு 14,411 ஆகக் காணப்பட்ட எண்ணிக்கை, 2011ஆம் ஆண்டு 12,795 ஆகவும், 2012ஆம் ஆண்டு 11,100 ஆகவும், 2013ஆம் ஆண்டு 9,444 ஆகவும் குறைந்துள்ளது. இதனை மேலும் குறைப்பதே நோக்கமாகும்.
உயர்தரத்திற்கு தகுதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை 2016ஆம் ஆண்டில் 75 வீதமாக உயர்த்துவதுடன், எந்தவொரு பாடத்திலும் சித்தி பெறத் தவறும் மாணவர்களின் எண்ணிக்கையை ஒரு வீதமாகக் குறைப் பதுமே அரசாங்கத்தின் இலக்காகும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments