உலகின் முதலாவது பகிரங்க செல்லிடத் தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டு நேற்று 3 ஆம் திகதியுடன் 41 வருடங்கள் பூர்த்தியடைந்தன.
'செல்போன் இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது' எனக் கூறாதவர்கள் இப்போது மிக அரிது. ஆனால், செல்லிடத் தொலைபேசியே இல்லாமல்தான் உலகம் இருந்தது என்பது புதிய தலைமுறையினருக்கு ஆச்சரியகரமானதாக இருக்கும்.
1973 ஏப்ரல் 3 ஆம் திகதிதான் உலகின் முதலாவது செல்லிடத் தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவின் மோட்டரோலா நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான மார்ட்டின் கூப்பர்தான் இந்த தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார்.
'செல்போன் இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது' எனக் கூறாதவர்கள் இப்போது மிக அரிது. ஆனால், செல்லிடத் தொலைபேசியே இல்லாமல்தான் உலகம் இருந்தது என்பது புதிய தலைமுறையினருக்கு ஆச்சரியகரமானதாக இருக்கும்.
1973 ஏப்ரல் 3 ஆம் திகதிதான் உலகின் முதலாவது செல்லிடத் தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவின் மோட்டரோலா நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான மார்ட்டின் கூப்பர்தான் இந்த தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார்.
அதன்பின் 10 வருடங்கள் கடந்த நிலையில்தான் பொதுமக்களுக்கு செல்லிடத் தொலைபேசி விற்பனைக்கு வந்தது.
1928 ஆம் ஆண்டு பிறந்த மார்ட்டின் கூப்பர். 1954 ஆம் ஆண்டு மோட்டரோலா நிறுவனத்தில் இணைந்தார். கார்களில் பொருத்தப்பட்ட வயர்லெஸ் தொலைபேசிகள் ஏற்கெனவே பாவனையில் இருந்த நிலையில் கையில் கொண்டுசெல்லப்படக்கூடிய செல்லிடத் தொலைபேசியை உருவாக்குவதற்கு பல நிறுவனங்கள் முயற்சித்து வந்தன.
கார்போன் தயாரிப்பில் பிரபலமான அமெரிக்காவின் பெல் லேப்ஸ் நிறுவனமும் மோட்டரோலா நிறுவனமும் இதில் தீவிரமாக ஈடுபட்டன. பொலிஸ் றேடியோ சிஸ்டம் உட்பட பல நடமாடும் தொலைபேசி சாதனங்களை உருவாக்குவதில் வெற்றி கண்ட மார்ட்டின் கூப்பர். கையில் கொண்டுசெல்லக்கூடிய தொலைபேசியை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார்.
1973.04.03 ஆம் திகதி, நியூயோர்க், மன்ஹெட்டன் நகரின் 6 ஆம் அவெனியூ வீதியில் வைத்து செல்லிடத் தொலைபேசி மூலம் முதலாவது பகிரங்க அழைப்பை மார்ட்டின் கூப்பர் மேற்கொண்டார். தனது போட்டியாளரான பெல் லேப்ஸ் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஜோயல் எஸ். ஏங்கலுக்கே மார்ட்டின் கூப்பர் இந்த அழைப்பை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஏங்கலின் நிலையான தொலைபேசியொன்றுக்கு இந்த அழைப்பு மேற்கொள்ளப்பட்டது. 'ஜோயல் நான் மார்ட்டி. சேல்போன் ஒன்றின் மூலம் உங்களுடன் நான் பேசுகிறேன். இது உண்மையாhன கையால் கொண்டுசெல்லப்படக்கூடிய தொலைபேசி' என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இந்த அழைப்பின்போது மார்ட்டின் கூப்பர் கூறினார்.
அவர் உருவாக்கிய DynaTAC 8000x தொலைபேசி 10 அங்குல நீளமும் ஒரு கிலோ எடையும் கொண்டிருந்தது. 10 மணித்தியாலம் சார்ஜ் செய்தால் 20 நிமிடங்கள் பேசலாம்.
1983 ஆம் ஆண்டு இத்தொலைபேசி சந்தைக்கு வந்தபோது அதன் எடை பாதியாக குறைந்திருந்தது. அதாவது சுமார் அரைக்கிலோ.
செல்லிடத் தொலைபேசியின் தந்தை எனக் கருதப்படும் மார்ட்டின் கூப்பருக்கு தற்போது 85 வயது. சில வருடங்களுக்கு முன் அவர் மாநாடொன்றில் உரையாற்றுகையில், தனது முதலாவது கைத்தொலைபேசி பெற்றரி 20 நிமிடங்களுக்கே தாக்குப்பிடிக்கும் என்ற போதிலும் அது பெரும் பிரச்சினையாக இருக்கவில்லை.
பாரமான அந்த தொலைபேசியை அவ்வளவு நேரம் கையில் வைத்திருப்பது கடினமானது எனத் தெரிவித்தார். துனது முதலாவது தொலைபேசியில் பல்வேறு அழைப்புகளை மேற்கொண்டதை நினைவுகூர்ந்த மார்ட்டின் கூப்பர் வீதியொன்றை கடந்துகொண்டிருந்தபோது, நியூயோர்க் செய்தியாளர் ஒருவருக்கு அழைப்பு விடுத்ததை குறிப்பிட்டு தனது வாழ்க்கையில் தான் மேற்கொண்ட மிக அபாயகரமான நடவடிக்கை அது எனத் தெரிவித்தார்.
ஆனால் அச்சம்பவம் நடைபெற்று 41 வருடங்களாகிவிட்டபோதிலும் வீதிகளை கடந்து செல்லும்போது வாகனங்களை செலுத்தும்போதும் தொலைபேசியில் உரையாடுவதை ஆபத்தானது என பலர் உணரவில்லை.
0 Comments