
கற்பிட்டி நகரில் உள்ள சிறுவர் பூங்காவில் காணப்படும் விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து கவணிப்பார் அற்ற நிலையில் உள்ளது. மாலை நேரங்களில் தமது நேரங்களை விளையாட்டில் கழிக்க வரும் சிறுவர்கள் வீடுகளுக்கு செல்லும் போது தமது உடலில் காயங்களுடனே செல்லவேண்டிய துர்பாக்கிய நிலை உருவாகி உள்ளது.
அங்கு காணப்படடும் சில உபகரணங்கள் சரியான பராமரிப்பு இன்மையால் பாவனைக்குதவாத நிலையில் உள்ளது. எமது செய்தியாளரின் தொலைபேசி கெமராக்குள் சிக்கிய புகைப்டங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பலமுறை உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்பட்டும் இவற்றை சீர் செய்ய அவர்கள் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையென பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்தப்பிரச்சினையைத்தீர்த்து வைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கற்பிட்டி பிரதேச சபை உப தலைவர் இன்பாஸ் மற்றும் உறுபினர்களான தாரிக் , அளாவுதீன் .பௌசான் ஆகியோரிடம் பிரதேச மக்கள் சார்பாக Kalpitiya Voice வேண்டிகொள்கிறது.
பி. கு: இணையதளத்தில் இதனை வாசிக்கும் நண்பர்கள் உடனடியாக மேல கூறப்பட்ட அரசியல் தலைவர்களிடம் பகிந்துகொல்லுங்கள்.
0 Comments