சிவாலயங்களில் கர்ப்பக் கிரகத்திற்கு எதிரில்
கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்திதேவர் தருமவிடை எனப்படுவார். அழிவே
இல்லாதது தருமம். அது விடை (ரிஷபம்) வடிவில் இறைவனிடத்தில் சென்றடைய, அந்த
நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார். தருமம் இறைவனைத் தாங்குகிறது.
அது
விடும் மூச்சுக் காற்றுதான் இவருக்கு உயிர்நிலை தருகிறது. இதனால்தான்
மூலவரின் தொப்புள் பகுதியை உயிர் நிலையாகக் கொண்டு, அதன் நேர்க்கோட்டில்
நந்தியின் நாசி அமையுமாறு அமைக்கப்படுகிறது.
இம்மூச்சு தடையேதுமின்றி
மூலவரைச் சென்றடையத்தான் நந்தியின் குறுக்கே போவதும் விழுந்து
கும்பிடுவதும் கூடாது என்பது வழக்கில் இருக்கிறது.
ருத்ரன், தூயவன்,
சைலாதி, அக்னிரூபன், மிருதங்க வாத்யப்ரியன், சிவவாஹனன், தருணாகரமூர்த்தி,
வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன், இப்படி பல்வேறு சிறப்புப்
பெயர்களோடு புராணங்களும் ஆகமங்களும் போற்றும் மூர்த்தி நந்தியெம்
பெருமானே.
0 Comments