Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று டிசெம்பர் 25

336: இத்தாலியின் ரோம் நகரில் நத்தார் கொண்டாடப்பட்டமைக்கான முதல் ஆவணத் தடயங்கள் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டன.

800 : சார்லமேன் புனித ரோமப் பேரரசனாக முடிசூடினார்

1000 : ஹங்கேரிப் பேரரசு முதலாம் ஸ்டீபனின் கீழ் கிறிஸ்தவ நாடாக உருவாக்கப்பட்டது.

1066 : முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினார்

 1741 : அண்டர்ஸ் செல்சியஸ் தனது செல்சியஸ் வெப்பமானியைக் கண்டுபிடித்தார்.

1758 : ஹேலியின் வால்வெள்ளி ஜொகான் பாலிட்ச் என்னும் ஜெர்மனியரால் அவதானிக்கப்பட்டது.

1868 : அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட அனைத்து கூட்டமைப்புப் படைவீரர்களுக்கும் பொது மன்னிப்பை அமெரிக்க ஜனாதிபதி அண்ட்ரூ ஜோன்சன் அறிவித்தார்.

1914 : முதலாம் உலகப் போரில் ஜேர்மனிக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் கிறிஸ்மஸ் தினத்தில்  போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.

1926 : ஜப்பானின் டாயீஷோ மன்னன் இறந்தார் அவனின் மகன் ஹிரோஹிட்டோ அரசனானார்;.

1932 : சீனாவின் கான்சு நகரில் 7.6 ரிச்டர் பூகம்பம் ஏற்பட்டதில் ஷ70,000 பேர் இறந்தனர்.

1941 : இரண்டாம் உலகப் போரில் ஹொங்கொங் மீதான ஜப்பானின் முற்றுகை ஆரம்பமாயிற்று.

1947 : சீனக் குடியரசின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.

1968 : கூலி அதிகம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 42 தலித் மக்கள் தமிழ்நாட்டில் கீழ்வெண்மணி கிராமத்தில் உயிருடன் தீயிட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

1977 : இஸ்ரேல் பிரதமர் பெகின், எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத்தை சந்தித்தார்.

1979 : சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் தனது படைகளை பெருமளவில் இறக்கியது.

1989 : ருமேனியாவின் கம்யூனிச ஜனாதிபதியான நிக்கொலாய் செய்செஸ்குவுக்கும் அவரது மனைவிக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1991 : சோவியத் தலைவர் பதவியில் இருந்து மிக்கைல் கொர்பச்சோவ் விலகினார்.

1991 : உக்ரேன் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகியது.

2000: ரஷ்யாவில் புதிய தேசிய கீதத்துக்கான சட்டமூலத்தில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கையெழுத்திட்டார்.

 2003 : மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தில் இருந்து டிசம்பர் 19 இல் ஏவப்பட்ட பீகில் 2 விண்கலம் தரையில் இறங்வதற்கு சற்று முன்னர் காணாமல் போனது.

2004 : காசினி விண்கலத்தில் இருந்து சனிக் கோளின் சந்திரனான டைட்டானில் இறக்குவதற்காக ஹியுஜென்ஸ் என்ற சேய்க்கலம் விடுவிக்கப்பட்டது. இது ஜனவரி 14,

2005: மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் தேவாலயத்தில் ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்டார்.

Post a Comment

0 Comments