Subscribe Us

பொதுநலவாய தலைவர்களின் உச்சிமாநாட்டின் ஆரம்ப நிகழ்வு இன்று கோலாகலமாக ஆரம்பம்

  (வீரகேசரி)
 
பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு இன்று கோலாகலமாக ஆரம்பமானது. அதனடிப்படையில், பொதுநலவாய இளைஞர் மாநாடும், மக்கள் மன்ற மாநாடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இளைஞர் மாநாடு அம்பாந்தோட்டையிலும் மக்கள் மன்ற மாநாடு ஹிக்கடுவயிலும் நடைபெறுகின்றது.
 
பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் 53 நாடுகளைச் சேர்ந்த 106 பிரதிநிதிகளும் 20 கண்காணிப்பாளர்களும் 5 செயலணி உறுப்பினர்களும் கலந்துக் கொள்கின்ற அதேவேளை, இலங்கை சார்பாக 25 பிரதிநிதிகளும் 20 கண்காணிப்பாளர்களும் 5 செயலணி உறுப்பினர்களும் கலந்துக் கொண்டுள்ளனர்.
 
இந்த மாநாட்டில் 8 முக்கியத் தலைப்புக்கள் தொடர்பில் ஆராயப்படுவதுடன் இலங்கை அரச தலைவர்களுடன் இளைஞர் மாநாட்டின் தலைவர்கள் விசேட கலந்துரையாடல்களிலும் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 




















 

Post a Comment

0 Comments