Subscribe Us

இலங்கை அணிக்கு இடைக்கால பயிற்றுநர்?

இலங்கைக் கிரிக்கெட் அணியின் தற்­போ­தைய பயிற்­றுநர் கிரஹம் போர்ட்டின் பத­விக்­காலம்முடிந்­த­வுடன் 2014 ஆம்­ஆண்டு நடை­பெ­ற­வுள்ள இரு­பது20 உல­கக்­கிண்ணப் போட்­டி­க­ளுக்கும் 2015 ஒருநாள் சர்­வ­தேச உல­கக்­கிண்ணப் போட்­டி­க­ளுக்கும் இடை­யி­லான காலப்­ப­கு­தியில் இடைக்­கால பயிற்­றுநர் ஒரு­வரை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் நிய­மிக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இலங்கை அணியின் உதவிப் பயிற்­று­ந­ரான மார்வன் அத்­த­பத்து, அல்­லது மார்க் டேவிஸ் போன்றோர் இப்­ப­த­விக்­கான தெரி­வு­களில் முன்­னி­லையில் உள்­ளனர்.
 
மார்வன் அத்­த­பத்து புதிய பயிற்­று­ந­ராக செயற்­படத் தகு­தி­யா­னவர் என
பயிற்­று­நரை தெரி­வு­செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழு கரு­து­கி­றது.
 
எனினும், இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்­களான மஹேல ஜய­வர்­தன, குமார் சங்­கக்­கார, தில­க­ரட்ன தில்ஷான் போன்ற வீரர்­களை முழு­மை­யாக கட்­டுப்­ப­டுத்­து­வதில் மார்வன் அத்­த­பத்து சிர­மங்­களை எதிர்­நோக்­கலாம் எனக் கரு­தப்­ப­டு­வதால் 2015 உல­கக்­கிண்ணப் போட்­டிகள் முடியும் வரை இடைக்­கால பயிற்­றுநர் ஒரு­வரை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் நிய­மிக்­கக்­க­கூடும் என 'கிரிக்­இன்போ' தெரி­வித்­துள்­ளது.
 
இடைக்­கால பயிற்­றுநர் ஒருவர் நிய­மிக்­கப்­பட்டால் அவர் இங்­கி­லாந்து, நியூஸிலாந்து சுற்­று­லாக்­க­ளின்­போதும் உல­கக்­கிண்ணத் தொட­ரிலும் பயிற்­று­ந­ராக செயற்­ப­டுவார். 

ஆனால், பெப்­ர­வரி மாதத்­துக்கு முன்னர் இடைக்­கால பயிற்­றுநர்
நிய­மிக்­கப்­ப­டா­விட்டால் ஆசிய கிண்ணம், மற்றும் இரு­பது20 உல­கக்­கிண்ணப்
போட்­டி­க­ளுக்கு மார்வன் அத்­த­பத்து பயிற்­று­ந­ராக செயற்­பட வாய்ப்­புள்­ள­தா­கவும் அச்­செய்­தியில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
 
இது தொடர்பாக அடுத்த மாத முற்பகுதியில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிறை வேற்றுக்குழுக் கூட்டத்தில் ஆராயப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments