1842 : நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1922 : எகிப்திய மன்னன் துட்டன்காமுன் என்பவரின் கல்லறைக்குள் ஹவார்ட் கார்ட்டர் மற்றும் கார்னாவன் பிரபு ஆகியோர் சென்றனர். 3000 ஆண்டுகளுக்குப் பின்னர் அதற்குள் சென்ற முதல் மனிதர்கள் இவர்களே.
1941 : பிரான்ஸிடமிருந்து சுதந்திரமடைவதாக லெபனான் ஒருதலைப்
பட்சமாக பிரகடனப்படுத்தியது.
பட்சமாக பிரகடனப்படுத்தியது.
1941 : இரண்டாம் உலகப் போர்: ஆறு ஜப்பானிய விமானங்கள் தொலைத்தொடர்புகள் அற்ற நிலையில் அமெரிக்காவின் பேர்ள் துறைமுகத்தை தாக்கியழிக்கப் புறப்பட்டன.
1942 : நோர்வேயைச் சேர்ந்த 572 யூதர்கள் ஜேர்மனியர்களினால் போலந்தின் ஓஸ்விட்ச் நகரில் உள்ள முகாமுக்கு நாடுகடத்தப்பட்டனர். இவர்களில் 25 பேரே தப்பினர்.
1949 : இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
1950 : மக்கள் சீனக் குடியரசின் படைகள் வட கொரியாவினுள் நுழைந்து தென் கொரியா மற்றும் அமெரிக்கப் படைகள் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்தன.
1957 : சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளைத் தீயிடும்
போராட்டத்தை தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்தார்.
போராட்டத்தை தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்தார்.
1965 : சகாரா பாலைவனத்தில் ஆஸ்டெரிக்ஸ்-1 என்ற தனது முதலாவது செய்மதியை பிரான்ஸ் விண்ணுக்கு அனுப்பியது.
1983 : லண்டன் ஹீத்ரோ விமான நிலைய பொதிகள் பாதுகாப்பு அறையில் இருந்து 26 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான 6,800 தங்கப் பாளங்கள் களவாடப்பட்டன.
2001 : நேபாளத்தில் மன்னர் கயனேந்திரா அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார்.
2002 : இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் தனிநாடு கோரும் அமைப்புக்களின் மீதான தடை நீக்கப்பட்டது.
2008: இந்தியாவின் மும்பை நகரில் தீவிரவாதிகளின் தாக்குதல் இடம்பெற்றது.
26/11 என குறிப்பிடப்படும் இத்தாக்குதல்களில் 10 தீவிரவாதிகள் உட்பட 166 பேர்
உயிரிழந்தனர்.
26/11 என குறிப்பிடப்படும் இத்தாக்குதல்களில் 10 தீவிரவாதிகள் உட்பட 166 பேர்
உயிரிழந்தனர்.
2011: பாகிஸ்தானில், பாகிஸ்தான் படையினரின் சோதனைச் சாவடியொன்று நேட்டோ படைகளின் தாக்குதலுக்குள்ளானது.


0 Comments