Subscribe Us

பங்களாதேஷில் கிளர்ச்சியில் ஈடுபட்ட 167 இராணுவ வீரர்களுக்கு மரணதண்டனை நீதிமன்றம் தீர்ப்பு


பங்­க­ளா­தேஷில்  கிளர்ச்­சியில் ஈடு­பட்ட 167  இரா­ணுவ வீரர்­க­ளுக்கு மரண தண்­டனை விதித்து அந்­நாட்டு நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.
 
பங்­க­ளா­தேஷில்  2009 ஆம் ஆண்டு எல்லைப் பாது­காப்பு படை வீரர்­க­ளுக்­கி­டையே பயங்­கர கல­வரம் ஏற்­பட்­டது. கீழ்ப்­ப­டிய மறுத்து புரட்­சியில் ஈடு­பட்ட வீரர்கள் நடத்­திய தாக்­கு­தலில் 57 இரா­ணுவ அதி­கா­ரிகள் உள்­ளிட்ட 74 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 இது தொடர்­பாக ஆயி­ரக்­க­ணக்­கான வீரர்கள் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்தில் வழக்கு நடை­பெற்று வந்­தது. இந்­நி­லையில் டாக்­காவில் உள்ள 3-ஆவது கூடுதல் பெரு­ந­கர அமர்வு நீதி­மன்­றத்தில் நடை­பெற்ற வழக்கின் விசா­ரணை முடி­வ­டைந்த நிலையில்  நேற்றுத்  தீர்ப்பு வழங்­கப்­பட்­டது.


அப்­போது, கிளர்ச்சி செய்த வீரர்­களில் 167 பேர் மீதான குற்றம் நிரூ­பிக்­கப்­பட்­டதால் அவர்­களை சாகும்­வரை தூக்­கி­லிட வேண்டும் என்று நீதி­பதி உத்­த­ர­விட்டார்.


இது­த­விர 158 வீரர்­க­ளுக்கு ஆயுள் தண்­ட­னையும், 251 பேருக்கு 3 முதல் 10 ஆண்­டுகள் வரை சிறைத் தண்­ட­னையும் விதிக்­கப்­பட்­டது. ஆயுள் தண்­டனை பெற்­ற­வர்­களில் பிர­தா எதிர்க்­கட்­சி­யான பி.என்.பி. கட்­சியின் முன்னாள் எம்.பி. நசி­ருதின் அஹமது பின்டு, அவாமி லீக் தலை­வரும் முன்னாள் படை­வீ­ர­ரு­மான டோரப் அலி ஆகி­யோரும் உள்­ள­டங்­குவர்.

242 பேர் நிர­ப­ரா­தி­க­ளாகக் கருதப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குற்றம் bசாட்டப்பட்ட 846 பேரில் 26 பேர் பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments