தற்போது குழந்தைகள் வேண்டாம் என்று கூறும் பெற்றோர்களே அதிகம் உள்ளனர்
என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு குழந்தை செல்வத்தின் மகிமையைப்
பற்றி பல பெற்றோர்கள் உணராமல் இருப்பதே காரணம்.
வேலைக்காகவும், பிஸியான சமுதாயத்திற்காகவும், இப்படி பலவித
காரணங்களுக்காகவும் குழந்தைகள் வேண்டாம் என்ற முடிவை பெற்றோர்கள் எடுத்து
வருகின்றனர். குழந்தைகள் பெற்றுக் கொள்வது அவர்களின் வாழ்க்கை தரத்தை
குறைக்கின்றது என்று நம்புகின்றனர். ஆனால் உண்மையில் குழந்தைகள் வாழ்க்கை
நிலையை உயர்த்தக் கூடியவர்கள். அதற்கான பல காரணங்களை நம்மால் கொடுக்க
முடியும். அப்படிபட்ட முக்கியமானதாகவும், கவனிக்கக்கூடிய சில காரணங்களையும்
பார்போமா!!!
பொறுப்புணர்ச்சி
குழந்தைக்கு தாயாகும் முன் நாம் எவ்வாறு இருக்கின்றோம் என்பது
முக்கியமில்லை. ஆனால் தாயான பின் பொறுப்புகள் மிக அதிகம். பொறுப்பான
அம்மாவாக இருக்கும் பட்சத்தில் அக்கறையுடன் நடந்து கொள்வதை விட, வேறு எந்த
வேலையும் முக்கியமில்லை. குழந்தையை கையில் ஏந்தும் தருணத்திலிருந்து
பேரப்பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் வரை பொறுப்புகள்
குறைவதில்லை. இந்த அக்கறை என்னும் பண்பு சிறந்த தாயாக உருவெடுக்க
செய்கின்றது.
மகிழ்தல்
குழந்தை தூங்குவதை கண்டு மகிழ்வதென்பது, இது நாள் வரை பார்த்த
விஷயங்களிலேயே சிறந்தது என்று கூறுவர். மேலும் அது நம்மை பரவச படுத்தும்
காட்சி என்றும் சொல்வார்கள். அத்தகைய குழந்தையை தொடும் பொழுதும், நெஞ்சோடு
அணைத்து கொள்ளும் போது ஒருவித அதிர்வை உணர நேரிடும். அதுவே தாங்க முடியாத
மகிழ்ச்சி.
குழந்தைப்பருவம்
குழந்தை வளர வளர நாமும் குழந்தையாய் ஆகின்றோம். முட்டாள்தனமாக நடந்து
கொள்ளும் விஷயம் என்று எதை நினைக்கின்றீர்களோ, அதை குழந்தையுடன்
மகிழ்ச்சியாக செய்வோம். குறிப்பாக தலையணை சண்டை, சிறு பிள்ளை விளையாட்டு
போன்றவை.
புதிய பந்தம்
குழந்தைக்கும், தாய்க்குமான உறவை போல வேறு எந்த உறவையும் காண
முடியாது. இதில் எல்லா வகையான உணர்ச்சிகளை உணர முடியும். குழந்தை வேண்டாம்
என்று நினைத்தால், இவை அனைத்தையும் இழக்க நேரிடும்.
வாழ்க்கையின் புதிய கோணம்
குழந்தையின் சூழ்நிலையை அனுகும் திறனை கொண்டு, இக்கட்டான சூழ்நிலையை
கையாளும் திறனை கற்றுக்கொள்ளலாம். அதிலும் இந்த உலகத்தில் எது தேவை, எது
தேவையற்றது என்பதை குழந்தைகளின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
மன அழுத்தம்
குழந்தைகள் இருந்தால் தேவையில்லாத டென்ஷன் என்று நம்பும் பெண்கள்,
தயவு செய்து உங்கள் அம்மாவிடம் கேளுங்கள், குழந்தைகள் எவ்வளவு மகிழ்ச்சியை
கொண்டு வரும் என்பதை உணர்வீர்கள். நாள் முழுவதும் வேளையில் அவதிப்பட்டு
வீடு திரும்பும் தாய்மார்கள், வீட்டில் குழந்தைகளால் எவ்வளவு மகிழ்ச்சி,
புத்துணர்ச்சி அடைகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். மேலும் எவ்வளவு
டென்ஷன், விரக்தி இருந்தாலும் குழந்தையின் அரவணைப்பில், அனைத்தும் மறந்து
போகும் என்பதை உணர முடியும்.
உறவு
குழந்தை செல்வம் கணவருடனான உறவை பலப்படுத்தும். திருமண வாழ்க்கையில்
குழந்தை பல அற்புதத்தை நிகழ்த்துகின்றது. குழந்தை பிறந்த உடன்
தம்பதியினருடனான அன்பு பலப்படுத்தப்படுகின்றது. மேலும் இடையில் தொலைந்து
போன அன்பை திருப்பி தருவது குழந்தை செல்வமே.
முதுமையில் பலம்
வயதானவுடன் உடல் சோர்வடையும் போது, உடல் அளவிலும், மனதளவிலும்
ஊன்றுகோளாய் இருப்பது குழந்தைகளே. கவலைகளை கேட்பதற்கும், தோள் சாய்வதற்கும்
நம் குழந்தைகள் மட்டுமே இருப்பார்கள்.
நம்பிக்கை
வாழ்க்கையில் பலவித பாதைகளை கடக்கின்றோம். சில வேலைகளையும், சில
விஷயங்களையும் நாம் சுமந்து செல்ல வேண்டிய நிர்பந்தம் எழுகின்றது. சில
வேளைகளில் விழுவதும் உண்டு. ஆகவே குழந்தைகள் இருந்தால் வாழ்க்கையில்
முன்னோக்கி செல்லும் ஆற்றல் நமக்கு அதிகமாக கிடைக்கும் என்பது சத்தியம்.

0 Comments